கைகெட்டும் தூரத்தில்தான் கைத்தடிகள் காத்து கிடக்கின்றன!, முதியோரை கடக்குமுன் சற்றே கவனி நாளை நமக்காகவும் கைத்தடிகள் காத்திருக்கலாம்!, கைத்தடிகள் கௌரவம் படுத்தப்பட்டதும் காந்தியடிகளால்தான் இந்த தேசத்தைப் போல!, தண்டி யாத்திரையில் தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவை கைத்தடிகள் அழகாய் காட்சிப்படுத்தின!, தாத்தாவின் கைத்தடிகள் பேரன்களுக்கும் பேத்திகளுக்குமான உறவை வளர்த்து விடுகின்றன!, கைத்தடிகள் காணாமல் போவதில்லை இந்திய உணர்வாய் தேசபிதாவின் நினைவாய் எங்களோடு என்றும் பயணிக்கும்!, நாங்கள் தாத்தாவையும் கைத்தடியையும் தூரத்தில் வீசுவதில்லை, நாளை நானும் தாத்தாவாகி போவேன் கைத்தடிகள் காத்திருக்கும் ஊன்று கோளாய், எங்கள் காந்தி தாத்தாவைப்போல இன்னுமொரு சுதந்திரத்திற்காக!!, -- செநா
Poems in Tamil from Writers at MagicAuthor.com