#நெட்ட நெடும் பாதையிலே ஒத்த சோடி பன போலே விரிஞ்ச இந்த ஒலகத்திலே - ௭ம் மனசு அண்டிக் கிடக்குதய்யா #பன ஒசர மனசுக்குள்ளே ௭ம் முகமும் பதிஞ்சிருந்த தடம் ஒண்ணே போதுமய்யா - இப் பாவி ௨சுரு வாழுமய்யா #கரிசமண்ணு ஆட்டம் போலே காத்தில் கரஞ்ச பாட்டும் போலே பள்ளிக்கால நெனப்பு ஒண்ணே - ராசு என் ஆயுசுக்கும் போதுமய்யா #கந்தக பூமி மண்போலே எரிஞ்சு கிடக்க வாழ்க்கையிலே சொம்புத் தண்ணி குளிரய்யா - ஒந் நெனப்பு எனக்கு வாரயிலே #பந்தம் காத்து வாழ்ந்திருப்போம் , நெஞ்சம் கனத்து போகையிலும் ; எதிர் முகம் காணயிலே - இன்னும் பூக்குதய்யா பூ ஒண்ணு .
Poems in Tamil from Writers at MagicAuthor.com