#நெட்ட நெடும் பாதையிலே
ஒத்த சோடி பன போலே
விரிஞ்ச இந்த ஒலகத்திலே- ௭ம்
மனசு அண்டிக் கிடக்குதய்யா
#பன ஒசர மனசுக்குள்ளே
௭ம் முகமும் பதிஞ்சிருந்த
தடம் ஒண்ணே போதுமய்யா- இப்
பாவி ௨சுரு வாழுமய்யா
#கரிசமண்ணு ஆட்டம் போலே
காத்தில் கரஞ்ச பாட்டும் போலே
பள்ளிக்கால நெனப்பு ஒண்ணே- ராசு
என் ஆயுசுக்கும் போதுமய்யா
#கந்தக பூமி மண்போலே
எரிஞ்சு கிடக்க வாழ்க்கையிலே
சொம்புத் தண்ணி குளிரய்யா- ஒந்
நெனப்பு எனக்கு வாரயிலே
#பந்தம் காத்து வாழ்ந்திருப்போம்,
நெஞ்சம் கனத்து போகையிலும்;
எதிர் முகம் காணயிலே- இன்னும்
பூக்குதய்யா பூ ஒண்ணு.
கருத்துகள்
கருத்துரையிடுக