முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர் வீதி


 Image by Mahinthan So - சொந்த முயற்சி


வடிவு வீங்கிய வயிற்றை செல்லமாக தடவியபடியே சிவன் கோவில் தேர் போல் அசைந்தாடி சுப்புணியிடம் வந்து , "அப்பா" என்றாள்.

அவள் மிகவும் களைத்திருந்தாள். பேசும் போதே மூச்சு வாங்கியது. நிறை சூலி. இரண்டு நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு சேர்த்தாகணும். பிரசவம் இலவசம் என்றாலும் ஆட்டோ, டிப்ஸ், டீத் தண்ணி என்று சில ஆயிரமாவது தேவைப்படுமே. 

"கவலைப்படாதே, வடிவு. முதலாளி சம்பள முன் பணமா இரண்டாயிரம் தரேன்னு சொல்லிட்டாரு. எல்லாம் அப்பன் சிவன் அருளாலே நல்லா நடக்கும்."

"அதுக்கில்லப்பா, உங்களுக்கும் வயசாகிட்டு வருது. முன்ன மாதிரி இல்ல. இந்த வருஷமும் தேர் வேலைக்கு போகத்தான் வேண்டுமா? வேண்டாம்பா. மனசே சரியில்லை. பயமாயிருக்குப்பா." என்றாள் கலங்கியபடி.

"அசட்டுப் பெண்னே, தைரியமா இருக்கணும். எத்தனை வருஷமா அப்பனுக்கு சேவை செய்த கட்டையிது. அவனருளால் ஒரு குறையும் வராது. முத்து போல் ஒரு பேரனை பெற்றுக் கொடுக்கப்போற" என்றான் சுப்புணி சிரித்தபடி.

திருநாள் வந்தது. தேர் வந்தது. ஊர்வலம் போகின்ற நாளும் வந்தது. கொள்ளை அழகுடன் சிவன் தேர் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது. முருகன் தேர், பின்னால் குட்டி கணபதி தேர் என வரிசையாக அலங்காரமாய் வண்ணமயமாக புறப்படும் நிலையில் தேர்கள் தயாராக இருந்தன.

தெருவெல்லாம் திடீர் கடைகள் முளைத்திருந்தன. பாத்திரக்கடை முதல் பேன்சி சவுரிக் கடைகள் வரை நடக்கக் கூட இடமின்றி அந்த பிரதேசமே முழுக்க வியாபித்து இருந்தன. பாம்பு உடல் பெண், மாஜிக் ஷோ, கரடி வித்தை, கம்ப்யூட்டர் ஜோசியம், ரிங் விளையாட்டு என அனைத்து திருவிழா அம்சங்களுக்கும் குறைவில்லை. வர்ண பலூன்களும், விசிறிகளும் கண்களைக் கவர்ந்தன.

நாதஸ்வரம் தவில் ஓசையுடன் கோவில் வழிபாடு ஒரு புறம் நடக்க, வெடிகள் அதிரடியாய் வானில் வெடித்துச் சிதறி வண்ண பூக்களை வாரியிரைத்தன.

ஜெண்டையும், பம்பையும் முழங்க மக்கள் கூட்டம் தேரினை இழுக்க முண்டியடித்து வரிசை பிடித்து 'ஹரஹர சிவ சிவ' என்று விண்ணதிர முழக்கமிட்டு ஆர்ப்பரித்து நின்றார்கள்.

முப்பது வருடங்களாக தேர்க் கட்டை போடும் கலையில் தேர்ந்தவனான சுப்புணி கடமையில் மும்மரமாக இருந்தான்.

கடகடவென தேர் ஓடத்தொடங்கியது. 'ஹோ ஹோ 'வென மக்களின் ஆரவாரம்.

'சிவ சிவா' வென்று விண்ணதிரே  முழக்கம். பரபரப்பு கூடிக்கொன்டே வந்தது.

சுப்புணி மகளை நினைத்து கொண்டான். பாவம் தாயில்லா பெண். துணைக்குக் கூட ஆளின்றி தனியாக ஆஸ்பத்திரியில் இருக்கா. எப்ப ஆகுமோ? எப்படி ஆகுமோ? ஆண்டவனே நீயே கதி.

படபடவென பட்டாசு ஒலி அதிர வைத்தது, ஜெண்டை மேளமும் , கொம்புகள் எக்காள ஒலியும்  உச்சகட்டத்தை எட்டின. திடிரென்று தேர் சக்கரம் பள்ளத்தில் புரண்டு நிலை தடுமாறியது. சுப்புணி திடுக்கிட்டான். கட்டை போட்டும் எதுவும் எடுபடவில்லை. வேகம் தணியவில்லை. தேர் ஒருபுறம் சாயத் தொடங்கியது.

கணநேரத்தில் சுப்புணி தேர்முன் பாய்ந்தான். 'சதக்' என்ற ஒலி . நசநசப்புடன் தேர் சுதாரித்தபடி சரியானது. தேர் நின்றது.

அரசு ஆஸ்பத்திரியின் அமைதியை கிழித்தபடி அப்பொழுதுதான் ஜனித்த ஆண் குழந்தையின் 'குவா குவா' சத்தம் காற்றில் மிதந்தது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை எழுதுவது எப்படி?

  ஒரு கவிதை எழுதுவது ஒன்றும் கடினம் அல்ல. இதையே ‘ஒரு கவிதை எழுதுவது எளிது’ எனவும் கொள்க (புரிந்ததா?!). முதலில் பேனா முனையில் கவிதை ஊற்றெடுக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். எதில் தொடங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது. முழுமையான கவிதை ஓன்று ஒரே sitting-ல் கிடைப்பதில்லை. பல அடித்தல்கள் திருத்தல்கள் சகஜம். எல்லாவற்றிர்க்கும் மேலாக, தொடர்ந்து எழுத வேண்டும். அவற்றின் சில பாகங்கள் கவிதையாகலாம். ஒரு கவிதைக்கு சில எதிரிகளும் உண்டு. முதலாவது, சங்கத் தமிழில் எழுதுதல். யாருக்கும் புரியாது. அடுத்து, கருத்து சொல்லல். அறிவுரைகள் செல்லுபடியாகாது. நீண்ட கவிதைகளும் வேண்டாம். ஒரு நிமிட கவிதைகள் அதிகம் விரும்பப்படும். தற்காலக் கவிதைகள் உவமைகள், தற்குறிப்பேற்றம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டதால் வலிந்தெடுத்து அச்சங்கதிகளைப் புகுத்த வேண்டாம். முதல் கவிதையே அச்சிலேற வேண்டும் என்பதில்லை. அது பெரும்பாலும் முதல் காதல், நண்பனின் துரோகம் சார்ந்து இருக்கும் என்பதால் வாசிப்பவர்களுக்கு கஷ்டமாயிருக்கும். மற்றபடி பெரும் வாசிப்பு தேவைப்படும். பெரும் அவதானிப்பும். இத்தனையும் தா...

காதலின் ரகசியம்

  நீ இல்லாமல் நொடி பொழுதில் உயிர் விடுவேன் கண்ணே எனக்கு முன்பே நீ பிறந்து விட்டாலும் நீ இல்லையெனில் நான் இல்லை திருமண வயதை கடந்தாலும் உன் கடைக்கண் பார்வையில் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நீ எல்லோரிடமும் பேசி வருவதால் கோபத்தில் கூட மறக்க நினைக்கிறேன் முடியவில்லை என் மீது உனக்கு காதல் இல்லையென்றாலும் என் சுவாச பையில் சிம்மாசனம் இட்டு சிரிக்கின்றாய் பூமி பந்தில் சில சமயம் புயலாக வருகிறாய் சில சமயங்களில் தென்றலாக வருடிச் செல்கிறாய் என்னில் புரியாத பதிராய் புன்னகை செய்கின்றாய் எல்லோரையும் காதலிக்கும் கலையை எங்கே கற்றுக் கொண்டாய் காற்றே ரகசியம் சொல்லிவிட்டு செல்வாயோ என் காதுகளில் அன்புடன் செநா .....

மொழிபெயர்ப்பு: Titanic -My heart will go on

  ௨னைத்   தொடுதலில்   உனைக்   கண்   தேடுதலில்   இடையறாது   நீள்கிறதென்   கனவுகள்   தொலைதூரத்   தேடுதலும்   இல்லை   இடைவெளிகளில்   நீ   தொலைந்ததும்   இல்லை   என்   இராக்கனவுகளில்   தினமும்   மீள்கிறாய்   உறவியாய்   நினைவுகளில்   நீங்காது   நீள்கிறாய்   மீண்டும்   ௭ன்   இதயக்   கதவுகளைத்   திறந்திட்டாய் - ௮து   யாண்டும்   உன்   குடிலென   புகுந்திட்டாய்   நினைவருகில் ,   யாக்கைத்   தொலைவில் -   ௭ங்கிருப்பினும்   என்   இதயக்   காவலில்   தினமும்   மீள்கிறாய்   உறவியாய்   நினைவுகளில்   நீங்காது   நீள்கிறாய்   தீண்டிச்   சென்றதோ   காதல்   ஒருமுறை -   தடை   தாண்டி   வளர்கிறது   நம்   சாதல்   வரை நான்   பாசமுற்ற   கணங்களோ   காதலென்பது -   நீ   நேசமேற்ற   நொடிகளில்   ௭ன்   வாழ்வு   ...