முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பா

  ஒரு பெருமழையின் கடைசித்துளியை மண் உறிஞ்சிக் கொண்டதுபோல் உன் இறுதித் தருணங்கள் பிரபஞ்சத்தில் கரைந்திருக்கக் கூடும்   ஒரு நூற்றாண்டின் சோர்வை அந்நாட்களில் கரைத்திருப்பாய் பெருவலியின் அடர்த்தியைக் கடத்திய கண்களின் கூர்மை என் எஞ்சிய வருடங்களைத் துளையிட்டுச் செல்கிறது நாம் சேமித்துக்கொண்ட பேசப்படாத சொற்களைக் கொண்டு துன்பம் தோயும் ஒரு கவிதையை எழுத முயல்கிறேன் ஓயாத அலைகளாய் துரத்தும் உன் நினைவுகளில் நனையாவண்ணம் நிற்கிறேன் எனினும், பாதத்தில் கரைந்தோடுகிறது மணல் நீண்ட இடைவெளிக்குப்பின் நாம் கைகோர்த்துக்கொண்டதும்; நீ என் மடி சாய்ந்து கொண்டதும் தீ கொண்ட உன் நினைவடுக்கில் புதைந்திருக்கிறதா இன்னும்? நம் சந்திப்பு எப்பொழுதேனும் நிகழக்கூடும் மீண்டுமொருமுறை; அம்முறையேனும் நீண்டதொரு காலம் கூடியிருப்போம் அப்பா!

காற்றின் மொழி திரைப்பாடல் போட்டிக்காக எழுதியது

  பல்லவி: கலங்காதே மனமே, சிறு பிரிவினில் மீளும் உறவுகள் நீளும் தனிமையின் நிழலில் உயிர் துணையினில் கொண்ட கசப்புகள் வீழும் இசையான வாழ்வில் நிலையான விரிசல்கள் தங்குவதேது கண்ணிலே வலியுணர்ந்து அவளினும் உனை மடியினில் தாங்குவதேது சரணம் 1: நீர் வழியும் உன் கண்கள் பார்த்திடவோ அவள் பொறுத்திடுவாள்? ஓருயிராய் உனைப் பொதிந்து தன் திருமனதில் நிறுத்திடுவாள்... நீயன்றி தாயொன்று வாய்த்திடுமா என்றஞ்சும், பூவென்றும் புயலென்றும், பெண்மை வெல்லும் உன் அன்பில் துஞ்சும் விதியினில் வீழுமோ வாழ்வே, இனியில்லை புரிதலில் வீழ்வே தன்முனைதல் இல்லா உறவின் தூதை விருத்தம் செய்யும் காற்றின் மொழியே... சரணம் 2: பால் பொழியும் நிலவிருந்தும் பாலையாய் மனம் எரிவதென்ன ஆல் விரிக்கும் விழுதினைப் போல் தாங்கலுக்குத் தவிப்பதென்ன விடைதேடும் உன்தேடல் முடிவன்றோ அவள் தோற்றம் புதிராடும் சதிராடும், விடை சொல்லும் உந்தன் வாழ்க்கைத் தேற்றம் பிரான்மலைத் தேரின் கொடியே, பிறிதில்லை இனியொரு கொடிதே நல்வாழ்வின் வாழ்த்தைப் பாடும் இச்சிறு பாணன் யாழின் காற்றின் மொழியே...

கவிதை எழுதுவது எப்படி?

  ஒரு கவிதை எழுதுவது ஒன்றும் கடினம் அல்ல. இதையே ‘ஒரு கவிதை எழுதுவது எளிது’ எனவும் கொள்க (புரிந்ததா?!). முதலில் பேனா முனையில் கவிதை ஊற்றெடுக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். எதில் தொடங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது. முழுமையான கவிதை ஓன்று ஒரே sitting-ல் கிடைப்பதில்லை. பல அடித்தல்கள் திருத்தல்கள் சகஜம். எல்லாவற்றிர்க்கும் மேலாக, தொடர்ந்து எழுத வேண்டும். அவற்றின் சில பாகங்கள் கவிதையாகலாம். ஒரு கவிதைக்கு சில எதிரிகளும் உண்டு. முதலாவது, சங்கத் தமிழில் எழுதுதல். யாருக்கும் புரியாது. அடுத்து, கருத்து சொல்லல். அறிவுரைகள் செல்லுபடியாகாது. நீண்ட கவிதைகளும் வேண்டாம். ஒரு நிமிட கவிதைகள் அதிகம் விரும்பப்படும். தற்காலக் கவிதைகள் உவமைகள், தற்குறிப்பேற்றம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டதால் வலிந்தெடுத்து அச்சங்கதிகளைப் புகுத்த வேண்டாம். முதல் கவிதையே அச்சிலேற வேண்டும் என்பதில்லை. அது பெரும்பாலும் முதல் காதல், நண்பனின் துரோகம் சார்ந்து இருக்கும் என்பதால் வாசிப்பவர்களுக்கு கஷ்டமாயிருக்கும். மற்றபடி பெரும் வாசிப்பு தேவைப்படும். பெரும் அவதானிப்பும். இத்தனையும் தா...