முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அச்சமில்லை, அச்சமில்லை!


 Photo by Benjamin Davies on Unsplash

'அச்சமே மரணம்' என்பார் விவேகானந்தர். 'அச்சமில்லை, அச்சமில்லை' என்று முழங்கினார் பாரதி. அச்சமே கீழ்களது ஆசாரம் என்று குறள் கூறும். அஞ்சி அஞ்சிச் சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே! என்று மனம் நொந்தான் பாரதி.

அச்சம் எனப்படும் இந்த பயம் என்ற உணர்வு எல்லோரிடமும் உள்ளது. நாமாக விரும்பி ஏற்பதல்ல இது. சிறுவயது முதலே பெற்றோராலும், மற்றோராலும் நமக்குக் கற்பிக்கப்படுவது.

பயம் என்பது சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்திற்கான ஒரு உடனடி சலனம். அச்சத்தை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி வயப்பட்ட வெளிப்பாடு ஆகும். இது தப்பித்தல் அல்லது எதிர்த்தல் போன்ற நடத்தைகளை ஒத்துள்ளது.

பயத்தின் மூலகாரணம் அறியாமையே. கருக்கிருட்டில் காலில் இடறியது கயிறா அல்லது பாம்பா என்று தெரியாமல் பாம்பாக இருக்குமோ என்று ஐயம் வந்தவுடன் பயம் மனதில் அப்பிக்கொள்கிறது. கடி, விஷம், வாயில் நுரை தள்ளல், மரணம் என்று அடுக்கடுக்காக கற்பனை விரிந்து நம்மை செயலிழக்க வைக்கிறது.

ஆனால் காலில் இடறியது பாம்பல்ல, கயிறுதான் என்ற உண்மையை வெளிச்சத்தில் பார்த்துத் தெளிந்தவுடன் அத்தனை பயமும் வடிந்து விடுகின்றது. புலியடித்து செத்தவர்களைக் காட்டிலும் கிலிபிடித்து இறப்பவர்கள் தான் அதிகம் இல்லையா?

ஆக பயம் என்பது வெளியில் எங்கும் இல்லை. நம் உள்ளிலிருந்து தான் உருவாகிறது.

தெரிந்த அபாயத்தில் பயம் வராது. எதிர்காலம் நிச்சயமற்றது. எதுவும் நடக்கலாம். ஆனால் நம் மனமோ எதிர்மறை சிந்தனைகளால் சிக்குண்டு வரவிருக்கும் அபாயம் பற்றியே எண்ணுகிறது. அச்சம் கொள்கிறது.

எதைக்கண்டுதான் நாம் பயப்படுவதில்லை? நீரைக் கண்டு பயம், நெருப்பைக் கண்டு பயம், விலங்கு பயம், தனிமை பயம், மேடை பயம், திருடர் பயம், போலீஸ் பயம், வறுமை பயம், நோய் பயம், மரண பயம் என்று பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

பயம் நம்மை முடக்கிப் போடுகிறது. முயற்சி செய்வதை தவிர்க்கப் பார்க்கிறது. தோல்வி வருமோ என்று நினைத்து தயக்கம் கொள்ளச் செய்கிறது. தோல்வியை ஒரு பெரும் இழப்பாகக் கருத வைக்கிறது.

பயம் நம்மை உறைய வைக்கிறது. சிந்திக்க விடாமல் செயலற்றுப் போக வைக்கிறது. தேங்கிப் போய் அழுகும்படி செய்கிறது.

பயப்படுவதை பழக்கமாக ஏற்றுக் கொண்டவனுடைய வாழ்க்கை சோகமயமானதாகவே இருக்கும். ‍- எட்வர்ட். ஹெச். ஹாரிமன்
 அச்சம் மறைமுகமான சம்மதம். எதையாவது கண்டு அஞ்சுகிறாய் என்றால் அது நடப்பதற்கு நீ சம்மதிக்கிறாய் என்று அர்த்தம். அது தான் அதன் கையை வலுப்படுத்துகிறது. அடி மனதின் சம்மதம் என்று அதைக் கூறலாம் ‍- அன்னை
 பயத்தைப் போக்க சரியான வழி அதைத் துணிவுடன் எதிர் கொள்வதே. அச்சம் தருவதைக் கண்டு அஞ்சி ஓடாமல் அதை நெருங்கிச் செல்வதன் மூலமே அச்சத்தை வெல்ல முடியும். ‍- ஜே. கே.
எதைச் செய்யப் பயப்படுகிறீர்களோ அதையே திருப்பி திருப்பி செய்வது தான் அச்சத்தை ஒழிக்கும் வழி - அன்னல் காந்தியார்

தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது, செய்து பார்ப்பது, உடனடியாக செயலில் இறங்குவது போன்றவைகள் தாம் நம் பயத்தைத் தகர்க்கும் வழி முறைகளாகும்.

மாவீரன் சிவாஜி, வீர அலெக்ஸாண்டர், நெப்போலியன், நெல்சன், ஜான்சி ராணி லட்சிமிபாய், பகத் சிங் போன்றோர்களின் வீரஞ்செறிந்த வரலாறுகளை படித்தாலே அச்சவுணர்வு அலறியோடிடும்.

எதிலும் மிதமாக இருங்கள். பேராசை வேண்டாம். அதிகம் எதிர் பார்க்க வேண்டாம். உங்களால் முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள். எல்லாவற்றையும் நீங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு அலைய வேண்டாம். பொறுப்புக்களை பிறருக்கும் பகிர்ந்து கொடுங்கள். எதையும் முன் யோசனையுடன் திட்டமிட்டு செய்யப் பழகுங்கள்.

தன்னம்பிக்கையோ, கடவுள் நம்பிக்கையோ ஏதேனும் ஒன்றில் நம்பிக்கை வையுங்கள். உடனடி செயலில் இறங்குங்கள்.

பயமின்றி வாழுங்கள்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை எழுதுவது எப்படி?

  ஒரு கவிதை எழுதுவது ஒன்றும் கடினம் அல்ல. இதையே ‘ஒரு கவிதை எழுதுவது எளிது’ எனவும் கொள்க (புரிந்ததா?!). முதலில் பேனா முனையில் கவிதை ஊற்றெடுக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். எதில் தொடங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது. முழுமையான கவிதை ஓன்று ஒரே sitting-ல் கிடைப்பதில்லை. பல அடித்தல்கள் திருத்தல்கள் சகஜம். எல்லாவற்றிர்க்கும் மேலாக, தொடர்ந்து எழுத வேண்டும். அவற்றின் சில பாகங்கள் கவிதையாகலாம். ஒரு கவிதைக்கு சில எதிரிகளும் உண்டு. முதலாவது, சங்கத் தமிழில் எழுதுதல். யாருக்கும் புரியாது. அடுத்து, கருத்து சொல்லல். அறிவுரைகள் செல்லுபடியாகாது. நீண்ட கவிதைகளும் வேண்டாம். ஒரு நிமிட கவிதைகள் அதிகம் விரும்பப்படும். தற்காலக் கவிதைகள் உவமைகள், தற்குறிப்பேற்றம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டதால் வலிந்தெடுத்து அச்சங்கதிகளைப் புகுத்த வேண்டாம். முதல் கவிதையே அச்சிலேற வேண்டும் என்பதில்லை. அது பெரும்பாலும் முதல் காதல், நண்பனின் துரோகம் சார்ந்து இருக்கும் என்பதால் வாசிப்பவர்களுக்கு கஷ்டமாயிருக்கும். மற்றபடி பெரும் வாசிப்பு தேவைப்படும். பெரும் அவதானிப்பும். இத்தனையும் தா...

தேர் வீதி

  Image by  Mahinthan So - சொந்த முயற்சி வடிவு வீங்கிய வயிற்றை செல்லமாக தடவியபடியே சிவன் கோவில் தேர் போல் அசைந்தாடி சுப்புணியிடம் வந்து , "அப்பா" என்றாள். அவள் மிகவும் களைத்திருந்தாள். பேசும் போதே மூச்சு வாங்கியது. நிறை சூலி. இரண்டு நாட்களில் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு சேர்த்தாகணும். பிரசவம் இலவசம் என்றாலும் ஆட்டோ, டிப்ஸ், டீத் தண்ணி என்று சில ஆயிரமாவது தேவைப்படுமே.  "கவலைப்படாதே, வடிவு. முதலாளி சம்பள முன் பணமா இரண்டாயிரம் தரேன்னு சொல்லிட்டாரு. எல்லாம் அப்பன் சிவன் அருளாலே நல்லா நடக்கும்." "அதுக்கில்லப்பா, உங்களுக்கும் வயசாகிட்டு வருது. முன்ன மாதிரி இல்ல. இந்த வருஷமும் தேர் வேலைக்கு போகத்தான் வேண்டுமா? வேண்டாம்பா. மனசே சரியில்லை. பயமாயிருக்குப்பா." என்றாள் கலங்கியபடி. "அசட்டுப் பெண்னே, தைரியமா இருக்கணும். எத்தனை வருஷமா அப்பனுக்கு சேவை செய்த கட்டையிது. அவனருளால் ஒரு குறையும் வராது. முத்து போல் ஒரு பேரனை பெற்றுக் கொடுக்கப்போற" என்றான் சுப்புணி சிரித்தபடி. திருநாள் வந்தது. தேர் வந்தது. ஊர்வலம் போகின்ற நாளும் வந்தது. கொள்ளை அழகுடன் சிவன் தேர் ...

திறமை தான் நமக்கு செல்வம்

  Image by  LuAnn Hunt  from  Pixabay உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு என்பார்கள். செங்கல் அடுக்கி சிமெண்ட் பூசும் மேஸ்திரிக்கு சம்பளம் நானூறு; ஆனால் அவரை வேலை வாங்கும் பொறியாளர் பெறுவது நான்காயிரம். ஏன் இந்த வேறுபாடு? முன்னவர் சொன்னதை மட்டும் செய்யக்கூடியவர். அதற்கு மேல் ஒரு படி கூட சுயமாக செய்யத் தெரியாது. பின்னவர் எதையும் ஏன் செய்ய வேண்டும், எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்றெல்லாம் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு, அதனை பிறரை கொண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர். அதாவது பொறுப்பும் , திறமையும் மிக்கவர். ஒரு பணக்காரருக்கு இரண்டு வேலைக்காரர்கள். அவர்களில் ஒருவனுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுத்து வந்தது பற்றி மற்ற வேலைக்காரன் பெரிதும் குறை பட்டுக் கொண்டான். பணக்காரன் அவனை அழைத்து வீட்டின் வெளியே சென்று எவராவது இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு வா என்றார். அவனும் வேகமாக ஓடி சென்று பார்த்து விட்டு "ஆம் ஐயா, தெரு முனையில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்". என்றான். இப்பொழுது அந்த பணக்காரர் அடுத்தவனை வெளியே அனுப்பினார். வந்தவன் தெரு முனையில் நின்று க...