முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பயணம்

 


Image by analogicus from Pixabay


"கஞ்ச பாளையம் ரயில் கேட் கிட்ட பொணம் ஒன்னு கிடக்காம் ."

யாரு?

"தெரியலே. வயசான பெருசாம் ."

முத்துவுக்கு வயிற்றில் ஐஸ்கத்தி செருகினாப் போல். காரமாய் அமிலம் சுரந்தது. உடனே கழிப்பறைக்குப் போக வேண்டும் போல் சங்கடம்.

அரக்கு சிவப்பாய் உறைந்தோடிய இரத்தம். நசுங்கிய தலை. விழிகள் நிலைகுத்தியபடி 'இப்ப என்னடா செய்வ' என்று கேட்டது. சிதறிய முண்டம் முட் செடியில்  சுருணை போல் தொங்கிக் கிடந்தது.

கற்பனை அவனை மிகவும் இம்சித்தது. கடவுளே! அவராக இருக்க கூடாது. "முருகா முருகா". உதடுகள் நடுங்கின. தனது மொபட்டை உதைத்து முறுக்கினான்.

காலையில் பல் துலக்கும் போதே அப்பாவின் செருப்பு இருக்குமிடம் வெறுமையாக கிடந்ததை கவனித்தான். வாக்கிங் போயிருப்பாரோ? திரும்பும் போது மாரி முத்து டீ கடையில் புகைத்தபடி தினத்தந்தி படித்து விட்டு ஏழரைக்கெல்லாம் வந்துடுவாரே. என்ன ஆச்சு ?

"அப்பா எங்கே? உங்ககிட்ட ஏதாச்சும் சொன்னாரா ?"

"நானென்ன கண்டேன் , நேத்திலிருந்து கோவமாத் தான் இருக்காரு, சரியா சோறு தின்னறதில்ல. என்ன எழவோ."

சிவகாமிக்கு விவரம் பத்தாது. படிப்பும் கம்மிதா. சின்ன மருமக வந்ததிலிருந்து இவ டம்மியாயிட்டா. மூட்டை துணி, மோழிப் பாத்திரம், சமைப்பது, பெருக்குவது என்று எல்லாம் அவள் தலையில் விழுந்தது.

நேற்று பெரியவர் டீ  தண்ணிக்கு ஆலாய் பறந்திருக்கார். சிவகாமிக்கு என்ன கடுப்போ. "போய்யா, சின்னவள டீ வச்சு கொடுக்க சொல்லு. சும்மா நொய் நொய்ன்னு மனுசி உயிரை வாங்கற" என்று பொங்கி விட்டாள்.

கோவிச்சுட்டு வயசான காலத்துல எங்க தான் போனாரு? ஒரு வேளை..அவனுக்கு 'குப்' என்று வியர்த்தது. நெஞ்சு படபடத்தது. அது அவரா இருக்கக் கூடாது. பழனி முருகா நீ தான் காப்பாத்தனம். உனக்கு காவடி எடுக்கிறேன்.

வழியில் சிறுவன் வண்டியை மறிச்சான். "அண்ணா இந்த பக்கம் வண்டி போகாது. போலீஸ்காரங்க தண்டவாளம் பக்கம் நிக்கறாங்க. எவனோ பிச்சைக்காரன் அடிபட்டு கிடக்கான்" என்றான்.

முத்துவுக்கு முதுகுத் தண்டு சிலிர்த்தது. அப்பா என்ன ஆனார்? அடுத்த விசாரம் அவனை தொத்தியது. போலீசுக்குப் போவதா? எங்கே போய் தேடுவது? பாழாப் போன பெருசு இப்படி செஞ்சுட்டதே. உடல் தளர்ந்து வாய் உலர்ந்து போனது. காற்றில் மிதப்பது போல் இயந்திரமாய் வீடு வந்ததே தெரியவில்லை.

வீட்டின் முன்னே அப்பாவின் செருப்பு அவனை வரவேற்றது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை எழுதுவது எப்படி?

  ஒரு கவிதை எழுதுவது ஒன்றும் கடினம் அல்ல. இதையே ‘ஒரு கவிதை எழுதுவது எளிது’ எனவும் கொள்க (புரிந்ததா?!). முதலில் பேனா முனையில் கவிதை ஊற்றெடுக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். எதில் தொடங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது. முழுமையான கவிதை ஓன்று ஒரே sitting-ல் கிடைப்பதில்லை. பல அடித்தல்கள் திருத்தல்கள் சகஜம். எல்லாவற்றிர்க்கும் மேலாக, தொடர்ந்து எழுத வேண்டும். அவற்றின் சில பாகங்கள் கவிதையாகலாம். ஒரு கவிதைக்கு சில எதிரிகளும் உண்டு. முதலாவது, சங்கத் தமிழில் எழுதுதல். யாருக்கும் புரியாது. அடுத்து, கருத்து சொல்லல். அறிவுரைகள் செல்லுபடியாகாது. நீண்ட கவிதைகளும் வேண்டாம். ஒரு நிமிட கவிதைகள் அதிகம் விரும்பப்படும். தற்காலக் கவிதைகள் உவமைகள், தற்குறிப்பேற்றம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டதால் வலிந்தெடுத்து அச்சங்கதிகளைப் புகுத்த வேண்டாம். முதல் கவிதையே அச்சிலேற வேண்டும் என்பதில்லை. அது பெரும்பாலும் முதல் காதல், நண்பனின் துரோகம் சார்ந்து இருக்கும் என்பதால் வாசிப்பவர்களுக்கு கஷ்டமாயிருக்கும். மற்றபடி பெரும் வாசிப்பு தேவைப்படும். பெரும் அவதானிப்பும். இத்தனையும் தா...

காதலின் ரகசியம்

  நீ இல்லாமல் நொடி பொழுதில் உயிர் விடுவேன் கண்ணே எனக்கு முன்பே நீ பிறந்து விட்டாலும் நீ இல்லையெனில் நான் இல்லை திருமண வயதை கடந்தாலும் உன் கடைக்கண் பார்வையில் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நீ எல்லோரிடமும் பேசி வருவதால் கோபத்தில் கூட மறக்க நினைக்கிறேன் முடியவில்லை என் மீது உனக்கு காதல் இல்லையென்றாலும் என் சுவாச பையில் சிம்மாசனம் இட்டு சிரிக்கின்றாய் பூமி பந்தில் சில சமயம் புயலாக வருகிறாய் சில சமயங்களில் தென்றலாக வருடிச் செல்கிறாய் என்னில் புரியாத பதிராய் புன்னகை செய்கின்றாய் எல்லோரையும் காதலிக்கும் கலையை எங்கே கற்றுக் கொண்டாய் காற்றே ரகசியம் சொல்லிவிட்டு செல்வாயோ என் காதுகளில் அன்புடன் செநா .....

மொழிபெயர்ப்பு: Titanic -My heart will go on

  ௨னைத்   தொடுதலில்   உனைக்   கண்   தேடுதலில்   இடையறாது   நீள்கிறதென்   கனவுகள்   தொலைதூரத்   தேடுதலும்   இல்லை   இடைவெளிகளில்   நீ   தொலைந்ததும்   இல்லை   என்   இராக்கனவுகளில்   தினமும்   மீள்கிறாய்   உறவியாய்   நினைவுகளில்   நீங்காது   நீள்கிறாய்   மீண்டும்   ௭ன்   இதயக்   கதவுகளைத்   திறந்திட்டாய் - ௮து   யாண்டும்   உன்   குடிலென   புகுந்திட்டாய்   நினைவருகில் ,   யாக்கைத்   தொலைவில் -   ௭ங்கிருப்பினும்   என்   இதயக்   காவலில்   தினமும்   மீள்கிறாய்   உறவியாய்   நினைவுகளில்   நீங்காது   நீள்கிறாய்   தீண்டிச்   சென்றதோ   காதல்   ஒருமுறை -   தடை   தாண்டி   வளர்கிறது   நம்   சாதல்   வரை நான்   பாசமுற்ற   கணங்களோ   காதலென்பது -   நீ   நேசமேற்ற   நொடிகளில்   ௭ன்   வாழ்வு   ...