முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீ ஒரு நெருப்புப் பறவை

 

ஏனோ ஒரு நெருப்பு

பந்தாய் கனக்கிறது

அவளின் இதயம்


ஒரு முற்செடியில்

குத்தி கிழிக்கப் பட்ட

பறவையின் உடலைப்போல

சிதறி கிடக்கிறாள்

தரையில்


பாரதி கண்ட

பதுமை பெண்தான்

அவள்


ஆனாலும்

நாற்காலிகள்

பிடுங்கப்படுகின்றன

அவளிடமிருந்து


பூமியில் விழுந்தால்

நீ விதையென்று

பூமிக்குத் தெரியும்


ஏனெனில்

உனக்கு மட்டுமே

இந்த பூமி

சொந்தம் என்பதும்

உனக்கும் தெரியும்


பற்றிக்கொள்

கற்றுக்கொள்

கடமை ஆற்று

வீராங்கனையின்

வாளைப் போல

வீழ்வது

அவர்களாகக் கூட

இருக்கலாம்


இருந்தாலும்

சற்றே படித்து வை

பாரதியின்

அக்னிக் குஞ்சினை


அன்புடன்

செநா .....


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை எழுதுவது எப்படி?

  ஒரு கவிதை எழுதுவது ஒன்றும் கடினம் அல்ல. இதையே ‘ஒரு கவிதை எழுதுவது எளிது’ எனவும் கொள்க (புரிந்ததா?!). முதலில் பேனா முனையில் கவிதை ஊற்றெடுக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். எதில் தொடங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கக் கூடாது. முழுமையான கவிதை ஓன்று ஒரே sitting-ல் கிடைப்பதில்லை. பல அடித்தல்கள் திருத்தல்கள் சகஜம். எல்லாவற்றிர்க்கும் மேலாக, தொடர்ந்து எழுத வேண்டும். அவற்றின் சில பாகங்கள் கவிதையாகலாம். ஒரு கவிதைக்கு சில எதிரிகளும் உண்டு. முதலாவது, சங்கத் தமிழில் எழுதுதல். யாருக்கும் புரியாது. அடுத்து, கருத்து சொல்லல். அறிவுரைகள் செல்லுபடியாகாது. நீண்ட கவிதைகளும் வேண்டாம். ஒரு நிமிட கவிதைகள் அதிகம் விரும்பப்படும். தற்காலக் கவிதைகள் உவமைகள், தற்குறிப்பேற்றம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டதால் வலிந்தெடுத்து அச்சங்கதிகளைப் புகுத்த வேண்டாம். முதல் கவிதையே அச்சிலேற வேண்டும் என்பதில்லை. அது பெரும்பாலும் முதல் காதல், நண்பனின் துரோகம் சார்ந்து இருக்கும் என்பதால் வாசிப்பவர்களுக்கு கஷ்டமாயிருக்கும். மற்றபடி பெரும் வாசிப்பு தேவைப்படும். பெரும் அவதானிப்பும். இத்தனையும் தா...

காதலின் ரகசியம்

  நீ இல்லாமல் நொடி பொழுதில் உயிர் விடுவேன் கண்ணே எனக்கு முன்பே நீ பிறந்து விட்டாலும் நீ இல்லையெனில் நான் இல்லை திருமண வயதை கடந்தாலும் உன் கடைக்கண் பார்வையில் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன் நீ எல்லோரிடமும் பேசி வருவதால் கோபத்தில் கூட மறக்க நினைக்கிறேன் முடியவில்லை என் மீது உனக்கு காதல் இல்லையென்றாலும் என் சுவாச பையில் சிம்மாசனம் இட்டு சிரிக்கின்றாய் பூமி பந்தில் சில சமயம் புயலாக வருகிறாய் சில சமயங்களில் தென்றலாக வருடிச் செல்கிறாய் என்னில் புரியாத பதிராய் புன்னகை செய்கின்றாய் எல்லோரையும் காதலிக்கும் கலையை எங்கே கற்றுக் கொண்டாய் காற்றே ரகசியம் சொல்லிவிட்டு செல்வாயோ என் காதுகளில் அன்புடன் செநா .....

மொழிபெயர்ப்பு: Titanic -My heart will go on

  ௨னைத்   தொடுதலில்   உனைக்   கண்   தேடுதலில்   இடையறாது   நீள்கிறதென்   கனவுகள்   தொலைதூரத்   தேடுதலும்   இல்லை   இடைவெளிகளில்   நீ   தொலைந்ததும்   இல்லை   என்   இராக்கனவுகளில்   தினமும்   மீள்கிறாய்   உறவியாய்   நினைவுகளில்   நீங்காது   நீள்கிறாய்   மீண்டும்   ௭ன்   இதயக்   கதவுகளைத்   திறந்திட்டாய் - ௮து   யாண்டும்   உன்   குடிலென   புகுந்திட்டாய்   நினைவருகில் ,   யாக்கைத்   தொலைவில் -   ௭ங்கிருப்பினும்   என்   இதயக்   காவலில்   தினமும்   மீள்கிறாய்   உறவியாய்   நினைவுகளில்   நீங்காது   நீள்கிறாய்   தீண்டிச்   சென்றதோ   காதல்   ஒருமுறை -   தடை   தாண்டி   வளர்கிறது   நம்   சாதல்   வரை நான்   பாசமுற்ற   கணங்களோ   காதலென்பது -   நீ   நேசமேற்ற   நொடிகளில்   ௭ன்   வாழ்வு   ...